திருவள்ளூர்: திருத்தணி தொகுதி தவெக வேட்பாளர் சத்யகுமார், கட்சி நிர்வாகிகளின் ஆதரவின்றி தன்னந்தனியாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
மற்ற கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும்கூட குறைந்தபட்சம் பத்து பேர் சூழ, தொகுதியை வலம் வரும் நிலையில், சத்யகுமார் மட்டும் தனியாக பிரசாரம் செய்கிறார்.
வேட்பாளராக சத்யகுமார் பெயர் அறிவிக்கப்பட்டதும் தவெக தொண்டர்களும் நிர்வாகிகளும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்ததாகவும் அப்போது அனைவரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த தவெகவினர் மாற்றி வேறு வேட்பாளரை அறிவிக்க கட்சி தலைமையை வலியுறுத்தி, தேர்தல் பணிகளை புறக்கணித்துள்ளனர்.
அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான சத்யகுமார், வேட்பு மனு தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் அருகே தவெகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் இரு நாள்களுக்கு முன்பு துணைக்கு யாருமின்றி தனியாகவே திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மேலும், தன்னந்தனியாக பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.

