கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் வரும் புதன்கிழமை (19.11.2025) தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மூன்று நாள்களுக்கு அங்குள்ள கொடிசியா அரங்கில் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார்.
மேலும், இயற்கை விவசாயத்தில் அதிக மகசூல் செய்து சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் கோயம்புத்தூர் வருகையை முன்னிட்டு, விழா நடைபெறும் பகுதியிலும் பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களி்லும் மொத்தம் மூவாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி கோவைக்கு வருகையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் வருகை தரும் நாளான நவம்பர் 19ஆம் தேதி மாநகரம் முழுவதும் முக்கியப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

