புகையிலைப் பழக்கத்திலிருந்து இளையர்களைப் பாதுகாக்க வேண்டும்: பிரபல மருத்துவர் வலியுறுத்தல்

புகையிலைப் பழக்கத்திலிருந்து இளையர்களைப் பாதுகாக்க வேண்டும்: பிரபல மருத்துவர் வலியுறுத்தல்

2 mins read
8fdba462-fe9c-4ec2-8250-6c78feee8a8e
மக்கள் விழிப்புடன் இருக்க உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்​டு​தோறும் மே 31ஆம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது. - படம்: பிக்சாபே

சென்னை: உல​க அள​வில் ஒவ்வோர் ஆண்​டும் 7 மில்லியன் பேர் புகை​யிலை தொடர்புடைய பழக்கத்தால் உயி​ரிழக்​கின்​றனர்.

மக்கள் விழிப்புடன் இருக்க உலக புகையிலை ஒழிப்பு தினம் ஆண்​டு​தோறும் மே 31ஆம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது.

இந்நிலையில், நுரை​யீரல் நிபுணர் மருத்​து​வர் நரசிம்​மன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்துப் பேசினார்.

‘இளையர்​களைப் புகை​யிலை, நிக்​கோட்​டின் பழக்​கத்​திலிருந்து பாது​காப்​போம்’ என்ற கருப்​பொருளில் இந்த ஆண்டு விழிப்​புணர்​வு​ நடவடிக்கைகள் நடத்தத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது என்று மருத்​து​வர் நரசிம்​மன் கூறினார்.

உலக அள​வில் ஒவ்​வொரு ஆண்​டும் 7 மில்லியனுக்கும் மேற்​பட்​டோர் புகை​யிலையை நேரடி​யாக உட்​கொள்​வது மூல​மாக​வும், 1.6 மில்லியன் பேர் மறை​முக​மாக​வும் உயி​ரிழக்​கின்​றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

“தற்​போது பெரிய​வர்​கள் மத்​தி​யில் புகை பழக்​கம் குறித்த விழிப்​புணர்வு ஏற்​பட்​டுள்​ளது, ஆனால் பள்​ளி, கல்​லூரி மாணவர்​களிடம் மின்சிகரெட் கலா​சா​ரம் அதி​கரிக்க தொடங்​கி​யுள்​ளது,” என்று மருத்​து​வர் நரசிம்​மன் கவலை தெரிவித்தார்.

“புகை​யிலையை உட்​கொள்​வதை விட மின்சிகரெட் பாது​காப்​பானது என்ற தவறான எண்​ணம் உள்​ளது. புகை​யிலையைப் புகைப்​ப​தால் என்ன பாதிப்​பு​கள் ஏற்​படுமோ அவை அனைத்​தும் மின்சிகரெட் மூல​மாக​வும் வரும்.

“இது இளையர்​களின் மூளை வளர்ச்​சி​யை​யும், மனநலத்​தை​யும் பாதிக்​கிறது. மேலும் மற்ற போதைப்​பழக்​கத்​துக்குத் தொடக்கப் புள்​ளி​யாக​வும் அமைந்​து​விடு​கிறது,” என்று திரு நரசிம்​மன் கூறினார்.

நீண்ட கால​மாக புகை​பிடிப்​பவர்​களில் 50 விழுக்காட்டினர் புகை​யிலை தொடர்​பான நோய்​களால்தான் உயி​ரிழக்​கின்​றனர்.

புகை​பிடித்​தல் என்​பது நுரை​யீரல் புற்​று​நோய், இதய நோய், பக்​க​வாதம், காச நோய் மற்​றும் பல்​வேறு சுவாச நோய்​களுக்கு நேரடி காரணமாகவும் உள்​ளது.

“பள்​ளி-கல்​லூரி​களுக்கு அரு​கில் புகை​யிலை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​வதை தடுத்து நிறுத்த வேண்​டும். இளையர்​களை ஆரம்ப கட்​டத்​திலேயே புகைப் ​பழக்​கத்​தில் இருந்து தடுத்​து​விட்​டால், அவர்​களு​டைய எதிர்​காலம் புகை​யில்லா எதிர்​கால​மாக, ஆரோக்​கிய​மான​தாக இருக்​கும்,” என்று மருத்துவர் நரசிம்​மன் சொன்னார்.

பெற்​றோரும் ஆசிரியர்​களும் புகை​யிலை இல்​லாத முன்​னு​தா​ரணங்​களாக இருப்​பது மிக​வும்​ அவசி​யம்​ என்றும் அவர்​ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்