சென்னை: ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்து’ மற்றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து ‘சிங்கா 60’ என்ற பிரம்மாண்ட கலைத் திருவிழாவை சென்னை அடையாறில் உள்ள போரம் ஆர்ட் கேலரியில் ஆகஸ்ட் 1ஆம் தொடங்கியது.
இதில் இந்தியா, சிங்கப்பூரை சேர்ந்த ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனை சிங்கப்பூர் துணை தூதர் எட்கர் பாங்க் தொடங்கி வைத்து பேசினார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்திய-சிங்கப்பூர் ஓவிய, சிற்பக்கலைஞர்களின் படைப்புகள் பார்வையாளர்களை வியக்க வைத்தன.
இக்கலைவிழாவில் இசை, நாடகம், ஆவணப் படம், அரசியல், கலை, கலாசாரம், சமையல், குழு விவாதம், கருத்தரங்கம் என பல்சுவை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.