கொளத்தூர் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஸ்டாலின்: கண்ணீருடன் வரவேற்ற மக்கள்

கொளத்தூர் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த ஸ்டாலின்: கண்ணீருடன் வரவேற்ற மக்கள்

1 mins read
e898691f-62eb-4f08-b9a6-4a89ce99d656
வாக்​களித்த மக்​களுக்கு நேரடி​யாக சென்று நன்றி தெரிவிக்​கும் கடமையை திமுக எப்​போதும் செய்து வருவதாகக் கூறியுள்ளார் ஸ்டாலின். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தாம் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும், அத்தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில், தேர்​தலில் தோல்​வி​யுற்​றாலும், வாக்​களித்த மக்​களுக்கு நேரடி​யாகச் சென்று நன்றி தெரிவிக்​கும் கடமையை திமுக எப்​போதும் செய்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

கொளத்தூரில் திறந்த வாக​னத்​தில் சென்ற ஸ்டா​லின், சாலை​யில் இருபக்​க​மும் கூடி​யிருந்த திமுக தொண்​டர்​களுக்கும் பொது மக்​களுக்கும் நன்றி தெரி​வித்​தார்.

அப்போது ஏராள​மான இளைஞர்​கள், பெண்​கள் கண்​ணீருடன் அவரை வரவேற்​றனர். இதைக்கண்ட ஸ்​டா​லின், தொண்​டர்​களிடம் அழவேண்​டாம் எனக் கூறி​னார்.

மக்கள் சந்திப்புக்குப் பின்னர் தமது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், கொளத்​தூருக்​கும் தமக்​கு​மான உறவு தேர்​தல் வெற்​றி, தோல்வி​களைக் கடந்தது என்றும் கடந்த 15 ஆண்​டு​காலம் தமக்கு ஆதரவு நல்​கிய​வர்​கள் கொளத்​தூர் தொகுதி மக்​கள் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

“தமிழகத்​தின் மாடல் தொகு​தி​யாக அனைத்து உள்கட்​டமைப்பு வசதி​களை​யும் செய்து கொடுத்​து, எந்​தக் கோரிக்​கை​யா​னாலும் நிறைவேற்​றிக் கொடுத்த பெரு​மிதத்​தோடு மக்​களை நேரில் சந்​தித்து நன்றி தெரி​வித்​தேன்,” என்று ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்