‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

இந்தியாவின் ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறப்படும் உதித்சூர்யாவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் இதுபோல ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் அங்குள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய19 வயது மகன் உதித்சூர்யா, இவ்வாண்டு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கிடைத்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி முதல்வர் போலிசில் புகார் செய்தார்.

இந்த வழக்கில் பெற்றோருடன் சேர்ந்து தலைமறைவாகியிருக்கும் உதித்சூர்யாவைத் தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர். இந்த ஆள்மாறாட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடம் தனிப்படை போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!