இந்தியாவின் ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறப்படும் உதித்சூர்யாவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் இதுபோல ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் அங்குள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அவருடைய19 வயது மகன் உதித்சூர்யா, இவ்வாண்டு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் கிடைத்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டதால் கல்லூரி முதல்வர் போலிசில் புகார் செய்தார்.
இந்த வழக்கில் பெற்றோருடன் சேர்ந்து தலைமறைவாகியிருக்கும் உதித்சூர்யாவைத் தனிப்படை போலிசார் தேடி வருகின்றனர். இந்த ஆள்மாறாட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடம் தனிப்படை போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
24 Sep 2019 12:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!