‘வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க மேலும் 127 விமானச் சேவைகள்’

கொவிட்-19 நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாயகத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன் தொடர்பில் ஆகஸ்ட் 5 முதல் 31 வரை தமிழகத்துக்கு 127 விமானச் சேவைகள் இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கால அட்டவணைப்படி விமானங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூன் 6 முதல் ஜூலை 20 வரை 101 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், கடந்த 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை 58 விமானங்கள் இயக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், விமானங்கள் மூலம் தமிழகத்தில் தரையிறங்க அனுமதி கோரி திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ராஜா முகமது ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவின் மீதான விசாரணையின்போது இந்தத் தகவல்கள் வெளியாகின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!