திமுக பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து காணொளி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3,500 பேர் பங்கேற்றனர்.

அதில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70க்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பங்கேற்றனர்.

திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகனும், 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளர்களாக க.பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

புதிய பொறுப்புகளை ஏற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் திரு ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கலந்துக்கொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, உடல்நலக்குறைவால் பாதியிலேயே வெளியேறினார்.

காலை சுமார் 11 மணி அளவில் அரங்கத்தில் இருந்து அவர் வெளியே வந்தார். உள்ளே ஏசி இருப்பதால் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதால் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!