கஜானாவை சுரண்டிய இரட்டையர்: அமித் ஷாவுக்கு திமுக பதிலடி

கஜானாவை சுரண்டிய இரட்டையர்: அமித் ஷாவுக்கு திமுக பதிலடி

1 mins read
3da00727-4e47-42e0-bc4e-818a98152a44
-

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் கஜானாவை சுரண்டிய இரட்டையர்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுகவை ஊழல் கட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா சாடியிருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், வாரிசு அரசியல் குறித்து அமித் ஷா விமர்சனம் செய்திருப்பது கண்ணாடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளதாக கூறியுள்ளார்.

"தமிழக அரசின் கஜானாவை சுரண்டிய இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா?" என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் சென்­னை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய மத்­திய அமைச்­சர் அமித் ஷா, மத்­தி­யில் காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றி­ருந்த போது, தமி­ழ­கத்­துக்கு கொண்­டு­வந்த திட்­டங்­களை பட்­டி­ய­லிட திமுக தயாரா? என சவால் விடுத்­தி­ருந்­தார்.

இதற்கு பதி­ல­ளித்­துள்ள திமுக எம்பி டி.ஆர்.பாலு, திமு­க­வின் சாத­னைப் பட்­டி­ய­லைச் சொல்ல வேண்­டும் என்­றால், நேருக்கு நேர் மேடை அமைத்து, அமித் ஷா கூறி­யி­ருப்­பது போல் தெரு­தோ­றும் கூட்­டம் போட்­டுப் பேச திமு­க­வால் முடி­யும் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேலும் திமுக முயற்­சி­யால் செயல்­ப­டுத்­தப்­பட்ட திட்­டங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்­ளார்.

குறிப்புச் சொற்கள்