நிவர் புயல் பாதிப்ைபத் தொடர்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கும் நிலை காணப்படுகிறது.
இதனால், மக்கள் கடைகளுக்கும் இதர முக்கியமான காரியங்களுக்கும் செல்லமுடியாமல் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.
“மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக இதற்கு ஒரு தீர்வு கண்டு, மழைநீரை அகற்றவேண்டும்,” என அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் கோரியுள்ளனர்.
தங்கள் வீடுகளில் புகுந்துள்ள நீரைக் குடியிருப்பாளர்கள் சிலர் பாத்திரங்களால் இரைத்து ஊற்றியும் வெளியேற்றி வருகின்றனர்.
நிவர் புயலைத் தொடர்ந்து கனமழை பெய்து இரு நாள்களாகிய பின்னரும், சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
சென்னை கொளத்தூரில் உள்ள டீச்சர்ஸ் காலனி குடியிருப்புப் பகுதி களில் தேங்கி நிற்கும் மழை நீரால், கடைகளுக்குச் செல்லமுடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதேபோன்று தில்லை நகர், செல்வி நகரிலும் மழைநீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நின்றது.
வீடுகளில் மழைநீர் புகுந்துள்ள தால், பெரும்பாலானோர் தங்களது உறவினர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
சிலர் சிறிய மோட்டார் பம்பை வைத்து தங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.
பெரியார் நகரில் உள்ள ஜெகநாதன் தெரு, அரசு மருத்துவ மனை வளாகம் உள்ளிட்ட பகுதி களிலும் மழைநீர் தேங்கி உள்ளது.
வில்லிவாக்கம் பாபா நகர் பால விநாயகர் ஆலயம் அமைந்துள்ள பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. அந்தப் பகுதியின் பெரும்பாலான வீடுகளில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருவதாக அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றம் பகுதி யில் உள்ள விவேக் அக்பர் அவென்யூ, மகா மேர் நகர் போன்ற பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு தீவு போல் காட்சி அளிக்கின்றன. வியாசர்பாடி முல்லை நகர் சாலை யில் தேங்கி உள்ள மழைநீர் வடியா மல் குளம்போல் காட்சி அளிப்பதாகவும் தகவல்கள் கூறியுள்ளன.