ஓபிஎஸ்: ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு

1 mins read
dde327d8-70af-4c7d-80c9-62c351d28ca2
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளதை அடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது மன்ற நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கொட்டும் மழையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என்றும் அவர்கள் உற்சாக முழக்கமிட்டனர். படம்: தமிழக ஊடகம் -

ரஜி­னி­காந்த் அர­சி­ய­லுக்கு வரு­வதை வர­வேற்­ப­தாக தெரி­வித்­துள்ள துணை­மு­தல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம், "அர­சி­ய­லில் எது­வும் நடக்­க­லாம். வரும் காலத்­தில் சூழ்­நி­லைக்ே­கற்ப ரஜி­னி­யு­டன் கூட்­டணி அமைக்­க­வும் வாய்ப்­புள்­ளது," என்று கூறி­யுள்­ளார்.

ரஜினி கட்­சி­யு­டன் கூட்­டணி அமைப்­ப­தற்கு தோதாக இப்­போதே அச்­சா­ரம் போடும் வகை­யில் துணை முதல்­வர் கருத்­து­க­ளைப் பகிர்ந்­துள்­ளது, அர­சி­யல் வட்­டா­ரத் தில் பர­ப­ரப்­பைக் கூட்­டி­யுள்­ளது.

சட்­ட­மன்­றத் தேர்­தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடை­பெ­ற­வுள்ள சூழ­லில், அர­சி­யல் களம் சூடு பிடித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஜன­வரி மாதம் புதிய அர­சி­யல் கட்­சி­யைத் தொடங்­கப் போவ­தா­க­வும் டிசம்­பர் 31ல் இது­கு­றித்த அறி­விப்பு வெளி யாகும் என்­றும் ரஜி­னி­காந்த்­தும் அறி­வித்­துள்­ள­தால் அவ­ரது ரசி­கர்­கள் பெரும் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், "ரஜி­னி­காந்த்­தின் அர­சி­யல் வரவு நல்­வ­ர­வா­கட்­டும். வரும்காலத்­தில் ரஜி­னி­யு­டன் கூட்­டணி அமைய வாய்ப்­புள்­ளது," என ஓ.பன்­னீர்­செல்­வம் கூறி­யுள்­ளார்.

ரஜி­னி­யின் நேர்­கா­ணலை இன்­னும் நான் பார்க்­க­வில்லை. ரஜி­னி­காந்த் கட்சி தொடர்­பாக அறிக்கை வெளி­யிட்ட பிறகு அதைப் படித்து­விட்டு கருத்து சொல்­கி­றேன் என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், ரஜி­னி­யின் அண்­ணன் சத்­ய­நா­ரா­யணா அளித்த பேட்­டி­யில், "ரஜி­னிக்கு இம்­மா­தம் 12ஆம் தேதி பிறந்­த­நாள் வரு­கிறது. அதற்கு முன்­பா­கவே தன்­னு­டைய அர­சி­யல் நிலைப்­பாட்டை ரஜி­னி­காந்த் அறி­விப்­பார்," என்று கூறி­யுள்­ளார்.

"ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் அதன் வாக்கு வங்கிக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை," என்று அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்