மணல் கொட்டி சாலைகளை மூடும் கேரள அரசு

மணல் கொட்டி சாலைகளை மூடும் கேரள அரசு

1 mins read
68ed809b-f293-4d5f-a923-f9abc15f034f
குமரி எல்லையில் மண்கொட்டி மூடப்பட்ட சாலை. படம்: ஊடகம் -

குமரி: தமி­ழ­கத்­தி­லி­ருந்து வரு­ப­வர்­கள் மூலம் கேர­ளா­வில் கிரு­மித்­தொற்று பரவி விடக்­கூ­டாது என்­ப­தற்­காக இரு மாநில எல்­லைப் பகு­தி­யில் உள்ள சாலை­களை கேரள அரசு மூடி­யுள்­ளது.

சாலை­களில் மண­லைக் கொட்டி தடுப்­ப­ரண்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னால் இரு­சக்­கர வாக­னங்­க­ளில்­கூட கேர­ளா­வுக்­குள் செல்­ல­முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த கடும் நிபந்­த­னை­க­ளு­டன் கூடிய ஊர­டங்கு கடந்த சில தினங்­க­ளாக அம­லில் உள்­ளது. இந்த முத்­த­டுப்பு ஊர­டங்­கின் மூலம் நல்ல பலன் கிடைக்­கும் என அம்­மா­நில அரசு எதிர்­பார்க்­கிறது.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் இருந்து யாரும் கேர­ளா­வுக்­குள் நுழைந்­து­வி­டக் கூடாது என்­ப­தற்­காக அம்­மா­நில போலி­சார் குமரி மாவட்­டத்தை ஒட்­டிய எல்­லைப்­ப­கு­தி­களில் உள்ள சாலை­களை மூடி­யுள்­ள­னர்.

இதற்­காக சாலை­களில் பெரும் குவி­ய­லாக மணல் கொட்­டப்­பட்­டுள்­ளது. இத­னால் சில தமி­ழக கிரா­மங்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டது போன்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

இரு மாநி­லங்­க­ளை­யும் இணைக்­கும் சிறிய சாலை­க­ளில்­கூட தடுப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் இரு­தரப்­பி­லும் பொது­மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் 'தின­க­ரன்' நாளேட்­டின் இணையதளச் செய்தி தெரி­விக்­கிறது.