விமானத்தில் 161 பேருடன் திருமணம்; விமான ஊழியர்கள் தற்காலிக இடைநீக்கம்

மதுரை: திருமணம் என்பது மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தா லும், அதை மேலும் சிறப்பாக நடத்தும் வகையில், பாராசூட்டில் திருமணம், மலை உச்சியில் திருமணம், கப்பலில் திருமணம் என புதுமையான முறையில் அவ்வப்போது திருமணங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது பறந்துகொண்டிருந்த விமானத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ள திருமணம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

விமானத்தில் நடந்த திருமணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், இந்த திருமணத் தின்போது பணியில் இருந்த விமான ஊழியர்கள் அனைவரும் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் கள் வெளிவந்துள்ளன.

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த மரக்கடை அதிபர் மகன் ராகேஷும் மதுரை தொழிலதிபரின் மகள் தீக்சனாவும் ஸ்பைஸ்-ஜெட் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். இவ்விமானம் பறந்து ெகாண்டிருந்தபோது மணமகன், மணமகளுக்குத் தாலி கட்டினார்.

மதுரையிலிருந்து தூத்துக் குடிக்குப் புறப்பட்ட விமானத்தில் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே, மணமகன், மணமகளின் உறவினர்கள் 161 பேர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!