கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு பாலுமகேந்திரன் என்ற இளைஞர் நடந்தே சென்றுள்ளார்.
இதையறிந்த காவல் ஆய்வாளர் மணிவேல், தனியார் அவசர சிகிச்சை வாகனத்தை வரவழைத்து, அந்த ேசவைக்கான கட்டணத்தைச் செலுத்தி இளைஞரை சிகிச்சை பெற அனுப்பிவைத்தார். மனிதநேயமுள்ள காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மன்னார்குடியைச் சேர்ந்த பாலுமகேந்திரன், 29, கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றார். ஆனால், அங்கு படுக்கை வசதி இல்லை என்றும் கோவிலாச்சேரி சிகிச்சை முகாமுக்கு செல்லும்படியும் மருத்துவ ஊழியர்கள் அவரை அலைக்கழித்துள்ளனர்.
இதையடுத்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலாச்சேரி சிகிச்சை முகாமுக்கு பாலுமகேந்திரன் நடந்தே சென்றுள்ளார். மூன்று கி.மீ. தூரம் நடந்து சென்ற அவரை, கும்பகோணம் காவல் ஆய்வாளர் மறித்து விசாரித்து, சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.

