தடுப்பூசிக்குப் பதியும்படி கேட்டு மோசடி வலை

தடுப்பூசிக்குப் பதியும்படி கேட்டு மோசடி வலை

1 mins read
a04568ee-301a-468f-a47a-2d76cc3dfa81
-

சென்னை: தமி­ழ­கத்­தில் கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) போடு­வ­தற்குப் பதிவு செய்­வ­தா­கக் கூறி வங்­கிக்­கணக்­கில் இருந்து பணத்தை திருடும் சம்­ப­வங்­கள் நிகழ்­வ­தால் மக்­கள் விழிப்­பு­டன் இருக்­கு­மாறு இணை­யக் குற்­றச்­செ­யல் தடுப்பு காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.

மக்­க­ளுக்குக் கூடு­தல் தடுப்­பூசி போடு­வ­தா­க­வும் விருப்­பம் உள்­ள­வர்­கள் தங்­கள்­ வி­வ­ரங்­களைப் பதிவு செய்­யு­மா­றும் கைபேசி எண்­ணுக்கு அழைப்­பு­கள், குறுஞ்­செய்தி­கள் வரு­கின்­றன.

அதில் உள்ள முக­வ­ரி­யில் விவ­ரங்­க­ளைப் பதி­வி­டு­மாறு அவை கேட்­டுக்கொள்­ளும். கைபே­சிக்கு வரும் ஒரு நேர ரக­சிய எண்ணைத் தெரி­விக்­கும்­படி கேட்டு அதை வாங்­கிக் கொண்டு அந்­தக் கும்பல் வங்­கிக் கணக்­கில் இருந்து பணத்தைத் திரு­டு­வ­தாக அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

முன்­பின் தெரி­யாதவர்­களை நம்பி விவ­ரங்­க­ளைக் கொடுக்­கக் கூடாது என்று காவல்­துறை பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்டது.