மா.சுப்பிரமணியன்: எந்தக் கிருமியையும் சமாளிக்கலாம்

மா.சுப்பிரமணியன்: எந்தக் கிருமியையும் சமாளிக்கலாம்

1 mins read
2a997133-1bb1-4140-a05a-9da7452e8cae
-

சென்னை: தமி­ழ­கத்­தில் 87 விழுக்­காடு மக்­க­ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உரு­வா­கி­யுள்­ளது என்று மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

எனவே எத்­த­கைய கிரு­மித் தாக்­கு­தலை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தா­லும் யாரும் கவ­லைப்­படத் தேவை­யில்லை என்று அவர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் இது­வரை நடை­பெற்ற 23 மெகா தடுப்­பூசி முகாம்­களின் மூலம் சுமார் 38 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

"தமி­ழ­கத்­தில் நூறு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன. எனவே தொற்று எண்­ணிக்கை தற்­போ­து­ ம­ள­ம­ள­வென சரிந்து வருகிறது. இனி எத்­த­கைய கிருமித் தாக்­கு­த­லை­யும் சமாளிக்க இயலும். கேரளா, கர்­நா­டகா போன்ற அண்டை மாநி­லங்­க­ளி­லும் சிங்­கப்­பூர், மலே­சியா போன்ற நாடு­க­ளி­லும் கொரோ­னா­வின் வேகம் இன்­னும் வீரி­யத்­து­டன் உள்ளது. அத­னால், இன்­னும் ஓரிரு மாதங்கள்­ கொ­ரோனா பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை பொது­மக்­கள் பின்­பற்ற வேண்­டி­யது அவ­சி­யம்," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.