சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் தீர்மானத்தை அதிபருக்கு அனுப்பி வைப்பதாக தமிழக ஆளுநர் தம்மிடம் உறுதி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, அதிபரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்புக்கு பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை அதிபருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் அதிபர் அந்த மசோதாவை ஏற்க மறுத்துவிட்டார்.

