கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களா உள்ளது.
இங்கு கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2021 ஆகஸ்ட் முதல் இந்த வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது.
கடந்த வாரம் சென்னையில் உள்ள சசிகலாவின் வீட்டில் வைத்து அவரிடம் இரு நாட்கள் கோடநாடு வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, ஜெய
லலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் விசாரணை நடத்த தனிப்படை காவல்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
விசாரணைக்கு வருமாறு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்றுக் காலை 10 மணியளவில் கோவை வந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கோவை காவல்துறை பயிற்சிப் பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து அவரிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான கேள்வி
களைச் கேட்டு விசாரணை நடத்தினர். அவரும் தனக்குத் தெரிந்த தகவல்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவற்றை அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர்.

