அமைச்சர்: பள்ளியைத் திறக்க நடவடிக்கை

அமைச்சர்: பள்ளியைத் திறக்க நடவடிக்கை

1 mins read
fadccf5c-5ccc-4591-8f81-e3f86034d813
-

கள்­ளக்­கு­றிச்சி: தனி­யார் பள்­ளி­யில் படித்து வந்த 4,000 மாண­வர்­க­ளின் எதிர்­கா­லம் கேள்­விக்­குறி ஆகி­வி­டா­மல் தடுக்­கும் வகை­யில், சூறையாடப்­பட்ட பள்­ளியை மீண்­டும் திறப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் நடந்து வருவதாக பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்­துள்­ளார்.

முதற்­கட்­ட­மாக 9, 10, 12ஆம் வகுப்­பு­க­ளுக்­கான பாடங்­கள் வேறு ஒரு தனி­யார் பள்­ளி­யில் நடத்­தப்­பட உள்­ள­தா­க­வும் இரண்டு மாவட்­டக் கல்வி அதி­கா­ரி­கள் மேற்­பார்வையில் வகுப்­பு­கள் விரை­வில் தொடங்கும் என்­றும் அமைச்­சர் உறுதி அளித்­துள்­ளார்.

இத­னி­டையே, கள்­ளக்­கு­றிச்சி கல­வர வழக்கை விசா­ரிக்க 18 பேர் கொண்ட சிறப்புப் புல­னாய் வுக்­கு­ழுவை அமைத்து காவல் துறைத் தலைவர் டிஜிபி சைலேந்­திர பாபு உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அண்­மைய கல­வ­ரத்தை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்­சி­ய­ராக இருந்த ஸ்ரீதர் மாற்­றப்­பட்­டார். புதிய ஆட்­சி­ய­ராக ஸ்வ­ரன்­கு­மார் ஜடா­வத் பொறுப்­பேற்­றுக்­கொண்­டுள்ளார். "தவ­றான வதந்­தியை மக்­கள் பரப்­பக் கூடாது," என அவர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.