ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று முன்தினம் இரவு 72 மி.மீ. மழை பதிவானது.
கே.சி.சி.நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். மாநகராட்சி ஊழியர்களும் தீயணைப்புத் துறையினரும் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வீடுகளில் சிக்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

