தி.மலை: கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரிய தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்லவர் கால கல்வெட்டுகளும் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சனாமலை அருகே இப்பொருள்கள் கிடைத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் மூலம் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்ததை அறிய முடிகிறது என்றும் கூறியுள்ளனர்.
“அண்மைய ஆய்வின்போது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. அதில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
“கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தென் மாத்தூர் என்ற சிற்றூரில் சோழர்காலத்து சிவலிங்கம், நந்தி, கோயில் கல்தூண்கள் ஆகியவை ஆங்காங்கே உள்ளன. இவற்றின் சிற்ப அமைப்பு பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது.
“மேலும், அந்த ஊரின் மேற்குப் பகுதியில் மரத்தடியில் நான்கு அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஓர் அடியாரின் சிற்பம் திருவண்ணாமலையை நோக்கி காணப்படுகிறது. இந்த சிற்பம் குறித்த கல்வெட்டுகள் ஏதும் இல்லை,” என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாத்தூர் பகுதியில் புதிதாக ஏரி வெட்டியது குறித்தும் ஏறி பராமரிப்பு பற்றியும் கல்வெட்டுகளில் விரிவான விளக்கங்கள் உள்ளன.