ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரே தாழியில் இரண்டு மண்டை ஓடுகள்

தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடவடிக்கையின்போது ஒரே தாழியில் இருந்து இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடி, ஆதிச்சநல்லூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன.

கீழடியில் மேலும் இரண்டு குழிகள் தோண்டப்படுகின்றன. இதன் மூலம் அகழாய்வுப் ணிகள் தீவிரமடைந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் இந்தப் பணியில் ஏராளமான ஆய்வாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை திறந்து, அவற்றில் காணப்படும் பொருள்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றை திறந்துபார்த்தபோது அதில் இரண்டு மூடிகள் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“அந்த மூடிகளையும் திறந்து பார்த்தபோது, இரண்டு மண்டை ஓடுகள், முதுகெலும்பு, கை, கால் எலும்புகள் காணப்பட்டன. மேலும், சிறு பானைகள், இரும்பால் ஆன உளி ஆகியவையும் இருந்தன.

“அவ்விரண்டு மண்டை ஓடுகளும் கணவன், மனைவிக்கு உரியவையா அல்லது தாய், குழந்தைக்கு உரியவையா என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்,” என ஆதிச்சநல்லூரில் முகாமிட்டுள்ள தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!