நான்கு நாள்கள் தொடர் விடுமுறை; சொந்த ஊருக்குச் சென்ற 4.8 லட்சம் பேர்

சென்னை: கடந்த மூன்று நாள்களில் சென்னையில் இருந்து 480,000 பேர் வெளியேறி உள்ளனர்.

ஆயுத பூசை உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு விடுமுறை என்பதால் சென்னையில் வேலை பார்க்கும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இதை கவனத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை மூன்று நாள்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இதைப் பயன்படுத்தி மூன்று நாள்களில் 4.8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

ஆண்டுதோறும் பண்டிகைக் காலத்தின்போது இவ்வாறு சிறப்பு பேருந்துகளை இயக்குவது வழக்கமாக உள்ளது.

இம்முறை கடந்த சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை ஆயுத பூசை, செவ்வாய்க்கிழமை விஜயதசமி என்பதாலும் நான்கு நாள்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை அமைந்துள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்று பெற்றோர், உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்துள்ளனர்.

பேருந்துகளில் மட்டுமல்லாமல், ரயில் மூலமாகவும் நூற்றுக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இதற்கிடையே, விடுமுறை கழித்து மீண்டும் சென்னை திரும்புகிறவர்களுக்காக தமிழக போக்குவரத்து துறை நூற்றுக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!