சேலம் அரசு மருத்துவமனையில் தீ: நோயாளிகள் பத்திரமாக மீட்பு

சேலம்: சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.

அறுவை சிகிச்சை அறைக்கு அருகே உள்ள குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயால் ஏற்பட்ட புகை அவசர சிகிச்சை வார்டு பகுதிக்குப் பரவியதால் அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஊழியர்கள் பாதுகாப்புடன் வெளியில் கொண்டு வந்தனர்.

மருத்துவமனை வளாக காவல்துறையினரும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்களும் மருத்துவமனைக்கு வந்து தீ, புகை மூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

நல்லவேளையாக தீ விபத்தில் உயிரிழப்பு ஏதுமின்றி அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெறும் அந்த மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இந்தத் தீச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தீவிபத்து குறித்து காவல்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!