வானிலை மைய எச்சரிக்கை தாமதமாகக் கிடைத்தது: முதல்வர்

புதுடெல்லி: தமிழக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை தமிழக அரசுக்கு தாமதமாகவே கிடைத்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மாவட்டங்களில் வானிலை மையம் கணித்ததைவிட மழைப்பொழிவும் மிக அதிகமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

“வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைவிட பல மடங்கு அதிக மழை தென் மாவட்டங்களில் பெய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைகளால்தான் பாதிப்புகள் பெருமளவு குறைந்தது,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தற்போது மீட்பு, நிவாரணப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மிச்சாங் புயலின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு பாராட்டியதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

“கன மழையால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்வையிட புதன்கிழமை (இன்று) நேரில் செல்கிறேன். அங்கு நேர்ந்திருப்பது பேரிடர் என்பதால் மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரியுள்ளோம்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!