வெள்ளப் பாதிப்பால் கடலுணவு ஏற்றுமதித் தொழில் முடங்கியது

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டத்தின் சோழியக்குடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது தடைபட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள மீனவர்கள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிட்டு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்பவர்.

சோழியக்குடி மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து இறால், நண்டு, கனவாய் போன்றவற்றைப் பிடித்து வருவர். அவற்றை தூத்துக்குடியில் உள்ள கடலுணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் வாங்கிப் பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றன.

நெல்லை, தூத்துக்குடி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் , மின்சாரத்தடை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களைக் பதப்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை ஓய்ந்த பின்னும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!