தீயணைப்புத்துறை அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி ஆனார்

சென்னை: தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தீயணைப்புத் துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

பிரியா ரவிச்சந்திரன் என்ற அந்த அதிகாரி 2022ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வு எழுதிய பிரியா, தமது 26வது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைப் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார்.

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இதே துறையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியா. இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக ஏசியா நெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு தமிழக அரசின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே இந்திய அதிபர் விருதும் பெற்றார்.

மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு தன்னலமற்ற சேவைக்காக பிரியா ரவிச்சந்திரனுக்கு முதல்வர் விருதும் வழங்கப்பட்டது.

பிரியாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!