முதுமலை முகாமில் யானைகள் கொண்டாடிய குடியரசு தினவிழா

முதுமலை: நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் 75-வது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அம்முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன.

அம்முகுட்டி, சங்கர், பாமா, கிருஷ்ணா உள்ளிட்ட யானைகளின் மீது தேசியக் கொடியுடன் பாகன்கள் அமர்ந்திருந்தனர். வனக் காப்பாளர், வேட்டை தடுப்புக் காவலர்கள் முன்னிலையில், காப்பக இணை இயக்குநர் திவ்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

அப்போது, அணிவகுத்து நின்ற யானைகள் பிளிறியபடி தங்கள் துதிக்கையை உயர்த்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. தொடர்ந்து, யானைகளுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது. இவ்விழாவில், சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!