விவசாய நிலத்தில் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருள்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர்: விவசாய நிலத்திற்கு தண்ணீர்க் குழாய் பொருத்த பள்ளம் தோண்டியபோது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நிலத்தில் தண்ணீர்க் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக கடந்த புதன்கிழமையன்று பள்ளம் தோண்டியபோது சிறிய அளவிலான கொப்பரைகள், மண் பாத்திரங்கள், கறுப்பு, சிவப்பு நிறத்திலான மண் பாண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கிடைத்தன.

இது குறித்து திருப்பத்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரும் தொல்லியல் ஆய்வாளர் பிரபுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பொருள்களைப் பார்வையிட்டனர். அவை அனைத்துமே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருள்களாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர் பிரபு தெரிவித்துள்ளார்.

“அக்காலகட்டத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிர் இழக்கும்போது நிலத்திற்கு அடியில் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது இறந்தவர் பயன்படுத்திய பொருள்களையும் உடன் வைத்து அடக்கம் செய்வர்.

“அந்த வகையில் தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் இறுதிச் சடங்கின்போது புதைக்கப்பட்டவையாக இருக்கக்கூடும்,” என்று தொல்லியல் ஆய்வாளர் பிரபு தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் தொல்லியல் துறை இப்பகுதியில் முறையான அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் பல அரிய தகவல்களும் பொருள்களும் வெளிவர வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!