கர்நாடக அரசு பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது என விவசாய சங்கங்கள் புகார்

மன்னார்குடி: பெங்களூரில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக கர்நாடக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்று தமிழக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை காரணம் காட்டி காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு சூழ்ச்சி செய்வதாக தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் அணைகட்டும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

“தண்ணீர் இல்லை என்று கூறி கர்நாடக அரசு அனுதாபம் தேட முயற்சி செய்கிறது. இதை நாம் நம்பிவிடக்கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மௌனம் காப்பது ஏற்கத்தக்கது அல்ல,” என்றார் பி.ஆர்.பாண்டியன்.

காவிரி டெல்டா பகுதியில் மார்ச் மாதமே தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே இப்பணியை முழுமையாக முடிப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!