சென்னை: நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டிய பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏதும் உள்ளதா என தமிழக சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள 35 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின்போது அவர்களில் 15 ஆயிரம் பேருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.