ஊட்டியில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் சிசிடிவி செயலிழப்பு

ஊட்டி: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, மேட்டுப் பாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள பெட்டக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

அங்கு 180 சிசிடிவி கருவிகள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி. திரையில் தெரியவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முகவர்கள், உடனடியாகத் தொழில்நுட்பப் பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி.யில் தெரிய ஆரம்பித்தது.

அதிகமான வெப்பத்தால் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு சிசிடிவி கருவி செயலிழந்ததாகவும் எவ்வித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்றும் நீலகிரி ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!