சவுக்கு சங்கரை விசாரிக்க காவல்துறை திட்டம்; யூடியூப் சேனல் மீதும் வழக்கு

கோவை: காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூப் சேனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யூடியூப் சேனலின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் சங்கர், தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயரதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன.

கோவை மாநகர இணையக் குற்ற காவல் துறையின் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது கோவை இணையக் குற்ற காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

மே 4ஆம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் காணொளியை வெளியிட்ட ‘ரெட் பிக்ஸ்’ யூடியூப் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிறையிலுள்ள்ள சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!