தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து திமுக கண்டனம்

மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது

1 mins read
f2fcffc1-598c-4f07-bc5b-75280bb98a67
கோயம்புத்தூரில் நடந்த திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. - படம்: தமிழ் இந்து

கோவை: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான நலத்திட்டங்கள் எதுவும் இல்லை. குறிப்பாக கோயம்புத்தூர், மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த எந்தவொரு அறிவிப்பும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிவிப்பில் தமிழ் நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கண்டித்து கோயம்புத்தூர் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ஜூலை 26ஆம் தேதி, மாநகராட்சியின் முக்கிய அலுவலகத்தின் விக்டோரியா கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக, திமுக கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டம், கோயம்புத்தூரின் வடக்குப் பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம், கோயம்புத்தூர் மாநகராட்சி திமுக குழுத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் புதன்கிழமை (ஜூலை 24) நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்