கடலில் தங்கக்கட்டிகளை வீசிய மூவர் கைது

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திவந்த தங்கக்கட்டிகளைக் கடலில் வீசிய மூவரை இந்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 4) அதிகாலை இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, மண்டபம் கடலோரக் காவல் படையினருடன் இணைந்து வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தீவிர சுற்றுக்காவலில் ஈடுபட்டனர்.

அப்போது, முயல் தீவுக்கும் மணாலி தீவுக்கும் இடையே உள்ள கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். உடனே அதிலிருந்தவர்கள் கடலுக்குள் ஒரு பொதியை வீசிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றனர்.

ஆயினும், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரித்தபோது, இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும், அதிகாரிகளைக் கண்டதும் அவற்றைக் கடலில் வீசியதாகவும், கடலில் பொதியை வீசிய இடத்தை ஜிபிஎஸ் கருவிகொண்டு அடையாளப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அதனைத் தொடர்ந்து, முக்குளிப்பாளர்களின் துணையுடன் கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் அடங்கிய பொதி கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

அப்பொதியினுள் ஐந்து கிலோ தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ஏறக்குறைய மூன்று கோடி ரூபாயாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!