மண்டாய் அவென்யூவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வெடித்தது (படம்: வாசகர்). விபத்தில் சிக்கிய 52 வயது ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கவனமின்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதன் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைக்கு ஓட்டுநர் ஒத்துழைத்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று காலை சுமார் 7.40 மணிக்கு இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் காவல்துறை இரண்டும் தெரிவித்தன.
மண்டாயில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு
1 mins read

