திடீர் மின்தடை: எரிசக்தி ஆணையம் விசாரணை

திடீர் மின்தடை: எரிசக்தி ஆணையம் விசாரணை

2 mins read
3771e555-fd56-46a6-b8c1-6df305411e29
-

சிங்கப்பூரின் பல்வேறு பகுதி­களில் நேற்று முன்தினம் பின்­னிரவு மின்தடை ஏற்பட்டதில் குடியிருப்பாளர்கள் உட்பட கிட்­டத்தட்ட 150,000 வாடிக்கை­யாளர்கள் பாதிக்கப்பட்டனர். தங்களது வீடுகள் இருளில் மூழ்கியதாக பாதிக்கப்பட்டவர்­கள் கூறினர். தெரு விளக்குகள் எரியாமல் போனதால் வாகன ஓட்டுநர்கள் சாலைகளில் கவ­னத்துடன் வாகனங்களை ஓட்­ டினர். மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எரிசக்தி சந்தை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பிடோக் முதல் ஜூரோங் வரை தீவின் 19 பகுதிகளில் பின்னிரவு 1.18 மணிக்கு மின்­தடை ஏற்பட்டதாக எரிசக்தி வழங்கும் நிறுவனம் எஸ்பி குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்­தது. 38 நிமிடங்களுக்குள் மின்சார விநியோகம் வழக்க­நிலைக்குத் திரும்பியது.

இருப்பினும், வாடிக்கையாளர்­ கள் சிலர் மின்தடையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாக பின்னர் தெரிவித்த எஸ்பி குழு­ மம், இதில் சம்பந்தப்பட்ட கட்ட­ டங்களுக்கு உதவி வழங்கிய­ தாக தெரிவித்தது. மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களிலிருந்து மின்சார விநியோகம் தற்காலி­கமாக தடைப்பட்டதே மின்­ தடைக்கு காரணம் என முதற்­கட்ட விசாரணையில் தெரிய­ வந்ததாக எஸ்பி குழுமம் தெரி­வித்தது. பாதிக்கப்பட்ட பகுதி­ களுக்கு அதிகாரிகள் அனுப்பப்­பட்டுள்ளதாகவும் அது சொன் னது.

பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதைத் தொடர்ந்து மின்­சாரக் கட்டமைப்பு சீரான நிலை­யில் உள்ளதாகவும் மின்தடை குறித்த விசாரணை தொடர்வ­தாகவும் அக்குழுமம் கூறியது. பூன் லே, சுவா சூ காங், கிளமெண்டி, ஜூரோங், பாண்டான் லூப், அல்ஜுனிட், கேலாங், தஞ்சோங் ரூ, மவுண்ட்பேட்டன், கெம்பாங்கான், பிடோக், ஈஸ்ட் கோஸ்ட், அங் மோ கியோ, பீஷான், தாம்சன், மண்டாய், அட்­மிரல்ட்டி, செம்பவாங், உட்­ லண்ட்ஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 146,797 குடியிருப்பு மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்­கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்­ கப்பட்டது. மின்தடையால் இங் டெங் ஃபோங் மருத்துவமனையும் ஜூரோங் சமூக மருத்துவமனையும் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. இருப்பினும், அந்த மருத்துவமனை­ களில் உள்ள 'ஜெனரேட்டர்கள்' இயக்கப்பட்டதால் சேவை­களுக்கோ நோயாளி பராமரிப்­புக்கோ பாதிப்பு ஏற்படவில்லை.