எல்ஆர்டி நிலையத்தில் பெண் சடலம்

பொங்கோல் ஈஸ்ட் இலகு ரயில் பாதையில் (எல்ஆர்டி) உள்ள கோவ் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு 33 வயதுப் பெண் ஒருவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

இதனையடுத்து, பொங்கோல் ஈஸ்ட், பொங்கோல் வெஸ்ட் எல்ஆர்டி பாதைகள் இரண்டிலும் சேவை நிறுத்தப்பட்டதாக வியாழக்கிழமை இரவு 10.32 மணிக்கு டுவிட்டர் வழியாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அறிவித்தது.

இரவு 10 மணியளவில் உதவிகோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கோவ் நிலையத் தளமேடைக்கு அருகேயிருந்த தண்டவாளத்தில் அப்பெண் இறந்து கிடந்ததாகக் கூறப்பட்டது. அவரின் இறப்பிற்கு தீய செயல் காரணமாக இருக்கும் என்று காவல்துறை சந்தேகிக்கவில்லை. விசாரணை தொடர்கிறது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக இலவசப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!