புனித வெள்ளி வாரயிறுதியில் 436,800 பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்

புனித வெள்ளி வாரயிறுதியில் ஏறக்குறைய 436,800 பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமைக்கும் (ஏப்ரல் 15) ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாதை வழியாக எல்லையைக் கடந்தோர் எண்ணிக்கை, இதற்கு முந்தைய வாரத்தில் இதே நாள்களுடன் ஒப்புநோக்க கிட்டத்தட்ட 25 விழுக்காடு அதிகம்.

புனித வெள்ளி விடுமுறையை முன்னிட்டு, மலேசியாவுக்குச் செல்ல கடந்த வியாழக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். அன்றைய தினம் மட்டும் 112,700 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாதை வழியாக 242,500 பயணிகள் சிங்கப்பூர் வந்ததாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) தெரிவித்தது.

அவர்களில் 79,200 பேர் பேருந்துகளில் அல்லது நடைப்பயணமாக இங்கு வந்தனர். 105,300 பேர் கார்களிலும் 58,000 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் வந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து 194,300 பேர் மலேசியாவுக்குப் புறப்பட்டனர். அவர்களில் 61,900 பயணிகள் பேருந்துகளில் அல்லது நடைப்பயணமாக மலேசியா சென்றனர். 77,600 பேர் கார்களிலும் 54,800 பேர் மோட்டார்சைக்கிள்களிலும் சென்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!