'சிடிசி' பற்றுச்சீட்டு 100 வெள்ளி கூடுகிறது

1 mins read
e6206220-d404-413f-8006-071eb1ebeb05
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அனைத்து சிங்­கப்­பூர் குடும்­பங்­களுக்கும் கூடுதலாக 100 வெள்ளி சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

2022 வரவுசெலவுத் திட்டத்தில் எல்லா சிங்­கப்­பூர் குடும்­பங்­களுக்கும் $200 சிடிசி பற்­றுச்­சீட்­டு­க­ள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூர் குடும்பங்கள் கூடுதலாக $100, அதாவது மொத்தம் $300 மதிப்பிலான சிடிசி பற்றுச்சீட்டுகளைப் பெறும். அப்பற்றுச்சீட்டுகளைப் பேரங்காடிகள், குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் உள்ள கடை­கள், உணவங்காடி நிலையங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் கைகொடுக்கும்.