ஆரோக்கியமான ஊழியர்களை மருத்துவமனைக்கு அனுப்பும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஊழியர்களை ‘கொவிட்-19’ சோதனைக்காக தேவையின்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பக்கூடாது என்று நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் மனிதவள அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாளிகள் தங்கள் ஊழியர்களை, கொரோனா கிருமிச் சோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்புவது குறித்த மருத்துவமனைகளின் புகார்களை அடுத்து மனிதவள அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முதலாளிகளோ நிறுவனங்களோ இதுபோன்று பொறுப்பற்ற முறையில் மருத்துவ வசதிகளை தவறாகப் பயன்படுத்தினால் அவர்களுக்கான வேலை அனுமதிச்சீட்டு பெறும் சலுகையை அவர்கள் இழக்க நேரிடும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் நிர்வாகப் பிரிவுக்கான இயக்குநர் கெவின் டியோ கூறுகையில், “வெளிநாட்டு ஊழியர்களை நிறுவனங்கள் கொரோனா கிருமித்தொற்று சோதனைக்காக அனுப்பி வைப்பதாக மருத்துவமனைகளில் இருந்து அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளன.

உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரை மருத்துவமனைகள் ‘கொவிட்-19’ சோதனைக்கு உட்படுத்தாது என்பதை முதலாளிகள் நினைவில் கொள்ளவேண்டும் என்று திரு டியோ கூறினார்.

நமது மருத்துவ வசதிகளும் மருத்துவ வளங்களும் உண்மையிலேயே மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் உடல் நலம் குன்றிய ஒருவருக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எவ்வித இடையூறும் வராமல் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களை முதலில் பொதுமருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டும். அங்கு அவரது உடல்நலம் குறித்த மருத்துவ ஆய்வுக்குப் பின், தேவையேற்பட்டால் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் திரு டியோ கூறினார்.

“அவசர மருத்துவச் சேவை பெறுவதற்கு மட்டும் மருத்துவமனையை நாட வேண்டும். இல்லையெனில், உண்மையிலேயே அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் ஒருவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கமுடியாமல் போய்விடக்கூடும்.

“எனவே முதலாளிகள் இதில் சமூக அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்,” என்றும் திரு டியோ கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில் முதலாளிகள் தங்கள் தொழிலாளிகளின் உடல்நலத்தில் அக்கறைகொண்டு அவர்களின் உடல் வெப்ப நிலையை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்து கண்காணிக்க வேண்டும்.

அத்துடன் அடிக்கடி சவர்க்காரத்தால் கைகளைக் கழுவுவது, உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்தும் ஊழியர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் திரு டியோ நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார்.

#தமிழ்முரசு #கொரோனா #பரிசோதனை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!