ஐஎஸ் அமைப்புக்கு நிதி அளித்ததை ஒப்புக்கொண்ட சிங்கப்பூரர்; அத்தகைய முதல் வழக்கு

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சிங்கப்பூரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 13) தொடங்கியது. இது பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவது தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெறும் முதல் வழக்கு விசாரணையாகும். இந்த வழக்கு தொடர்பாக நாளை (ஜனவரி 14) காலை தீர்ப்பளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிட உதவும் வகையில், துருக்கியில் உள்ள ஆடவருக்கு பணம் கொடுத்ததாக 36 வயது இம்ரான் காசிம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொள்வது அல்லது குற்றச்சாட்டை மறுத்து வழக்கு கோருவது தொடர்பாக இம்ரானிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, “என்னால் குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ முடியாது. ஏனென்றால் நான் சிங்கப்பூரின் சட்டத்தை மதிப்பவன் அல்ல. இஸ்லாமிய சட்டத்தை மட்டும் மதிக்கிறேன்,” என்றார் அவர்.

இஸ்லாமிய சமயத்தில் ஷாரியா சட்டத்துக்கு மட்டும் தாம் கட்டுப்படுவதாக இம்ரான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“பணம் அனுப்பியதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று இம்ரான் தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கான கொள்கை பரப்பு அறிக்கையை அச்சிட துருக்கியில் உள்ள ஆடவர் ஒருவருக்கு $450 அனுப்பியதாக இம்ரான் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது அல்சையத் அல்மிதான் என்ற நபரிடம் வெஸ்டர்ன் யூனியன் குளோபல் கட்டமைப்பு மூலம் இம்ரான் பணம் அனுப்பியதாக நம்பப்படுகிறது.

“பயங்கரவாதம் ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகலாவிய சமூகத்தின் ஓர் அங்கம் என்ற முறையில் பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குதல் ஆகியவற்றுக்கு எதிரான போரில் சிங்கப்பூர் அதன் கடமையை உணர்ந்து செயல்படுகிறது,” என்று அரசு வழக்கறிஞர்கள் நிக்கலஸ் கூவும் ஃபூ ஷி ஹாவும் தெரிவித்தனர்.

ஐஎஸ் பயங்கரவாதத்துக்குப் பலன் தரவும் ஆதரவு திரட்டவும், அது பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ளவும் கொடுக்கப்படும் பணம் உதவும் என்று தெரிந்தே இம்ரான் பணம் அனுப்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.

2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று இம்ரான் பணம் அனுப்பியதற்கான சான்றை அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அதில் இம்ரான் கைப்பட எழுதிய குறிப்பும் கையெழுத்தும் இருந்தன. இம்ரானைப் பிரதிநிதித்த வழக்கறிஞர்கள் விலகிக்கொண்டனர்.

தற்போது அவரை வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்கவில்லை. அவரே அவரைப் பிரதிநிதித்துக்கொள்கிறார்.

அரசு வழக்கறிஞர்கள் முன்னிலைப்படுத்திய சாட்சிகளிடம் இம்ரான் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைத் தவிர மற்ற அமைப்புகளும் இஸ்‌ரேலும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலின்கீழ் வருகின்றனவா என்று இம்ரான் கேள்வி எழுப்பினார்.

தம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட ஆடவர் அமெரிக்கா வெளியிட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் என்பதை வர்த்தக விவகாரத் துறை எவ்வாறு உறுதி செய்தது என்று இம்ரான் கேள்வி கேட்டார்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பே தமது கைகளில் ஏன் விலங்குகள் மாட்டப்பட்டன என்று இம்ரான் கேட்டபோது, பாதுகாப்பு நிமித்தம் அவ்வாறு செய்யப்பட்டதாக நீதிபதி பதிலளித்தார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இம்ரான் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

வெளிநாடுகளின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட அவர் நோக்கம் கொண்டிருந்ததால் அவருக்கு எதிராகத் தடுப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு இம்ரானின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். “ஐஎஸ் அமைப்புக்கு உன்மீது அக்கறை இல்லை,” என்று அவர்களில் ஒருவர் இம்ரானிடம் கூறியபோது, சிங்கப்பூர் அரசாங்கத்துக்குத்தான் அக்கறை இல்லை என்றும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் அது ஈடுபட்டதாகவும் இம்ரான் கூறினார்.

குடும்பத்தைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்க்க இம்ரானின் குடும்பத்தினர் கோரியபோது, குடும்பத்துக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என்றும் எப்படியிருந்தாலும் தம்மைக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றும் இம்ரான் கூறினார்.

#தமிழ்முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!