கடந்த நீண்ட வாரயிறுதியில் 950,000க்கும் அதிகமானோர் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்

கடந்த நீண்ட வாரயிறுதியில் 950,000க்கும் அதிகமான பயணிகள் சிங்கப்பூர்-மலேசியா தரைவழி எல்லைகளைக் கடந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 29) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை வரையிலான ஐந்து நாள்களில் சிங்கப்பூரிலிருந்து 491,400 பேர் மலேசியாவுக்குச் சென்றனர். அதே காலகட்டத்தில் 462,400 பேர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தனர்.

இதற்கு முன்னதாக, புனித வெள்ளி வாரயிறுதியின்போது 436,800 பேர் இருநாட்டு தரைவழி எல்லைகளைக் கடந்தனர். சிங்கப்பூர்-மலேசியா எல்லைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முழுமையாகத் திறக்கப்பட்ட பிறகு வந்த முதல் பொது விடுமுறையாக புனித வெள்ளி அமைந்தது.

குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில், கடந்த நீண்ட வாரயிறுதியில் பேருந்துகளில் சென்றவர்களைவிட கார்கள், மோட்டார்சைக்கிள்களில் சென்றவர்களே அதிகம். சிங்கப்பூர்-மலேசியா எல்லைகளைக் கடந்தவர்களில் 660,400 பேர் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்தினர். ஒப்புநோக்க, 293,400 பேர் பேருந்துகளில் பயணம் செய்தனர்.

எல்லைத் தாண்டிய பொதுப் பேருந்துச் சேவைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வழங்கப்பட்டு வருவதே இந்த வித்தியாசத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!