இவ்வாண்டின் பங்குனி உத்திர காவடி/பால்குட ஊர்வலம் ரத்து

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி புனித மரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் நடைபெறவிருந்த பங்குனி உத்திர காவடி/பால்குட ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கிருமித்தொற்று உலகளவில் பரவி வரும் வேளையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக நிர்வாகம் இன்று (மார்ச் 15) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

ஈசூன் தொழிற்பேட்டையில் இருக்கும் அக்கோவிலில் ஏப்ரல் 5ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத ஊர்வலமும் மறுநாளின் காவடி, பால்குட ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பங்குனி உத்திர திருவிழாவின்போது காவடிகள், பால் குடங்களுக்காக முன்பதிவு செய்துகொண்டவர்கள் நாளை (மார்‌ச் 16) முதல் காலை 9 மணி முதல் 12 வரையிலும் இரவு 7 மணி முதல் 9 வரையிலும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஏப்ரல் 6ஆம் தேதி அன்று கோவிலில் பால் அபி‌ஷேகம் நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்தது.

மேல் விவரங்களை நாளைய தமிழ் முரசு அச்சுப்பிரதியில் படிக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!