உக்ரேனில் போரைத் தொடர ரஷ்ய அதிபர் புட்டின் சூளுரை

உக்ரேனில் போரைத் தொடர ரஷ்ய அதிபர் புட்டின் சூளுரை

2 mins read
9b051a2c-ea6c-4f88-aacb-e1757881af08
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி பிரச்சினையை மோசமாக்குவதாக ரஷ்ய அதிபர் புட்டின் குற்றம் சாட்டினார். படம்:ஏஎஃப்பி -

ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின், உக்­ரேன் மீதான போரைத் தொடர­ இருப்­ப­தா­கச் சூளு­ரைத்­துள்­ளார்.

அமெ­ரிக்­கா தலை­மை­யி­லான நேட்டோ ராணு­வக் கூட்­டணி பிரச்­சி­னையை மோச­மாக்­கு­வ­தா­கக் கூறிய அவர், மாஸ்­கோ­வைத் தோற்­க­டிக்­க­லாம் என்று அது தவ­றான நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

போர் தொடங்கி ஓராண்டு முடி­வ­டை­ய­வி­ருக்­கும் நிலை­யில் நேற்று திரு புட்­டின், நாட்­டின் அர­சி­யல் தலை­வர்­கள், ராணுவ உய­ர­தி­கா­ரி­கள் உள்­ளிட்­டோர் முன்­னி­லை­யில் உரை­யாற்­றி­னார்.

நாட்­டின் எதிர்­கா­லத்­தை­யும் நாட்டு மக்­க­ளின் எதிர்­கா­லத்­தை­யும் வரை­ய­றுக்­கக்­கூ­டிய முக்­கிய வர­லாற்று நிகழ்­வு­கள் தற்­போது நடை­பெ­று­கின்­றன என்­றா­ர­வர்.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி 24ஆம் தேதி உக்­ரேன்மீது 'சிறப்பு ராணுவ நட­வ­டிக்கை' மேற்­கொள்ள உத்­த­ர­வி­டும் நிலைக்­குத் தாம் தள்­ளப்­பட்­ட­தாக ரஷ்ய அதி­பர் கூறி­னார்.

"அமை­தி­யான வழி­யில் சிக்­க­லுக்­குத் தீர்­வு­காண, ஆன அனைத்து முயற்­சி­க­ளை­யும் ரஷ்யா மேற்­கொண்­டது. பொறுமை காத்­தது.

"ஆனால் போருக்கு முன்­னரே உக்­ரேன் மேற்­கத்­திய நாடு­க­ளி­டம் ஆயு­தம் வாங்க முனைந்­தது. ரஷ்யா 2014ல் இணைத்­துக்­கொண்ட கிரி­மியா மேல் தாக்­கு­தல் நடத்­த­வும் அது திட்­ட­மிட்­டது," என்­றார் அவர்.

கியவ் அர­சாங்­க­மும் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் மேற்­கத்­திய அதி­ப­தி­களும் உக்­ரே­னிய மக்­க­ளைப் பிணை­பி­டித்து உள்­ள­னர் என்று அவர் சாடி­னார்.

ரஷ்­யா­வைத் தோற்­க­டிக்க முடி­யாது என்­றும் ரஷ்ய சமூ­கத்­தைப் பிள­வு­ப­டுத்­தும் மேலை நாடு­களின் முயற்சி பலிக்­காது என்­றும் திரு புட்­டின் கூறி­னார்.

பெரும்­பா­லான ரஷ்­யர்­கள் உக்ரேன் மீதான போருக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். போரில் உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்கு சிறப்பு நிதி வழங்க ரஷ்ய அதிபர் உறு­தியளித்­தார்.