ஜி20 மாநாடு: இந்தியாவுக்கு சிங்கப்பூர் வலுவான ஆதரவு

ஜி20 மாநாடு: இந்தியாவுக்கு சிங்கப்பூர் வலுவான ஆதரவு

2 mins read
6157a322-8480-4461-a478-0c68a136fe98
ஷங்ரிலா ஹோட்டலில் இம்மாதம் 25ஆம் தேதி நடந்த 74வது இந்தியக் குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் (வலது) சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பெரியசாமி குமரனும் இப்படிக் கிண்ணம் உயர்த்தி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை உறுதிப்படுத்தினர். படம்: சிங்கப்பூர் இந்தியத் தூதரகம் -

இன்­றைய நிச்­ச­ய­மற்ற உல­கத் தோற்­றத்­தில் ஜி20 அமைப்பை ஏற்­று­ந­டத்­தும் இந்­தி­யா­வின் முன்­னு­ரி­மை­க­ளுக்கு சிங்­கப்­பூர் வலு­வான ஆத­ரவை வழங்­கும் என்று சிங்­கப்­பூ­ரின் வர்த்தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் தெரி­வித்துள்­ளார். ஜி20 அமைப்­பின் தலை­மைத்­து­வத்தை 2022 டிசம்­பர் 1 முதல் இவ்­வாண்டு நவம்­பர் 30 வரை­யி­லான ஓராண்டு காலத்­திற்கு இந்­தியா வழி­ந­டத்­தும்.

தலை­மைத்­து­வத்தை ஏற்­றுள்ள இந்­தியா, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, ஆர்­வம் நிறைந்த, செயல் சார்ந்த மற்­றும் தீர்க்­க­மான நிகழ்ச்­சி­நி­ரலை ஜி20 உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் முன்­வைக்­கும் என்று சிங்­கப்­பூர் நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தாக திரு கான் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள இந்­தி­யத் தூத­ர­கம் ஏற்று நடத்­திய இந்­தி­யா­வின் 74வது குடி­ய­ரசு தின வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு திரு கான் பேசி­னார்.

"ஜி20 தலைமை ஏற்­றி­ருக்­கும் இந்­தியா உலக நாடு­கள் கலந்­து­கொள்­ளும் நிகழ்ச்­சி­நி­ர­லைத் தயா­ரிக்­கும் முக்­கிய பணி­யில் ஈடு­பட உள்­ளது," என்­றார் அவர்.

கொள்­ளை­நோய்க்­குப் பிறகு இது­போன்ற வர­வேற்பு நிகழ்ச்­சி­கள் மீண்­டும் நிகழ்­வது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக திரு கான் கூறி­னார்.

ஜி20 என்­பது உல­கின் முன்­ன­ணி­யில் உள்ள 20 நாடு­க­ளின் கூட்­ட­மைப்பு ஆகும். பெரும்­பா­லும் உலகின் பெரிய, வள­ரும், வளர்ந்த பொரு­ளி­யல் நாடு­களை உள்­ள­டக்­கி­யது இந்த அமைப்பு.

'ஒரே பூமி, ஒரே குடும்­பம், ஒரே வருங்­கா­லம்' என்­னும் கருப்­பொ­ரு­ளில் இந்த ஆண்­டுக்­கான உச்­ச­நி­லைக் கூட்­டத்தை இந்­தியா நடத்­தத் திட்­ட­மிட்டு உள்­ளது. அத­னைத் தொட்­டுப் பேசிய அமைச்­சர் கான், "இன்­றைய நிச்­ச­ய­மில்லா உல­கில் நாம் எதிர்­நோக்­கும் பொது­வான சவால்­க­ளைச் சமா­ளிக்க நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து பணி­யாற்­ற வேண்டிய அவசியத்தை இந்­தக் கருப்­பொ­ருள் உணர்த்­துகிறது," என்­றார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் தற்­காப்பு, வர்த்­த­கம், கலா­சா­ரம் உள்­ளிட்ட பல துறை­களில் காலங்­கா­ல­மாக அணுக்க உறவு இருந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு மென்­மே­லும் வலு­வ­டைந்து வரு­வ­தா­கக் கூறி­னார்.

இந்­தி­யா­வின் ஆகப்­பெ­ரிய வெளி­நாட்டு முத­லீட்­டா­ள­ராக சிங்­கப்­பூர் விளங்­கு­வ­தாக திரு கான் சொன்­னார். சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் 2005ஆம் ஆண்டு US$1.3 பில்­லி­யன் முத­லீடு செய்­தி­ருந்­த­தா­க­வும் அது படிப்­ப­டி­யாக வளர்ந்து 2020ஆம் ஆண்டு US$6 பில்­லி­யனை எட்­டி­ய­தா­க­வும் கூறிய அவர், 15 ஆண்­டு­களில் 50 மடங்கு முத­லீட்டு வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார். சிங்கப்பூரைச் சேர்ந்த சுமார் 440 நிறுவனங்கள் இந்தி யாவில் இயங்குகின்றன.

அதேபோல இந்தியாவின் நிறு வனங்கள் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வெளிநாட்டு வர்த்தகக் குழுக்களாக உள்ளன.