தோசை ஆசை பொங்கலின்போது நிறைவேறியது

தோசை ஆசை பொங்கலின்போது நிறைவேறியது

1 mins read
46736df8-50d6-4c1a-9730-dfa09299ef5a
-

செங் சான் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் 'பொங்கல் 2016' விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப் பட்டது. பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுடன் மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய நடனங்களும் வண்ணம் தீட்டுதல், மருதாணி இடுதல், கோலமிடுதல் ஆகிய போட்டிகளும் இடம்பெற்றன. சிறப்பம்சமாக, பிரதமர் கரண்டியில் மாவை எடுத்து தோசைக்கல்லில் வார்த்தது அங்கிருந்தோரை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்