ஒரே வாரத்தில் 628 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்

ஒரே வாரத்தில் 628 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்

1 mins read
bcfa654d-7b56-4248-878c-40a50c165e87
-

புத்தாண்டு தொடங்கியது. ஆனால் டெங்கியின் பாதிப்பு குறையவில்லை. ஜனவரியிலிருந்து டெங்கி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இம்மாதம் 10ஆம் தேதியி லிருந்து 16ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் 628 டெங்கி சம்பவங்கள் பதிவானது. இது, கடந்த வாரத்துடன் ஒப் பிடுகையில் 80க்கும் மேற்பட்ட சம் பவங்களாகும். தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இந்த விவரங்களை வெளியிட்டது. நேற்று முன்தினம் வரையில் கொசுக்கள் அதிகம் காணப்படும் 132 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வாரியம் குறிப்பிட்டது.

இவற்றில் 31 இடங்கள் சிவப்பு வட்டாரமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட டெங்கி சம்பவங்கள் ஏற்பட்டதால் அதிக அபாயமிக்க இடமாகவும் கருதப்படுகிறது. மற்றவை மஞ்சள் வட்டாரங்கள். இந்நிலையில், கொசு இனப் பெருக்கம் அதிகரித்ததற்கு வெப்ப மான பருவநிலை காரணமாக இருக்கலாம். இதனால் பொது மக்கள் உடனடியாக உரிய நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வாரியம் தெரிவித்தது.