பயங்கரவாத ஒழிப்பில் சிங்கப்பூரின் பங்கு தொடரும்

பயங்கரவாத ஒழிப்பில் சிங்கப்பூரின் பங்கு தொடரும்

1 mins read
e4df8837-ef31-4e9d-bd8b-56f9d2c1903b
-

தமி­ழ­வேல்

பயங்க­ர­வாதத்­துக்கு எதிரான அனைத்­து­லக நடவடிக்கையில் சிங்கப்­பூர் ராணுவம் தொடர்ந்து தனது வளங்களை ஈடு­படுத்­தும். அது சிங்கப்­பூ­ரின் பாது­காப்­புக்கு நேரடி­யான பங்கை ஆற்­று­கிறது என்று தற்­காப்பு அமைச்­சர் டாக்டர் இங் எங் ஹென் நேற்று நாடா­ளு­மன்றத்­தில் கூறினார். ஐஎஸ்ஐ­எஸ் பயங்க­ர­வாத அமைப்­புக்கு எதிரான உலகக் கூட்­ட­ணிப் படைக்­குச் சிங்கப்­பூர் ஆயு­தப்­படை ஆதரவு அளிக்­கும் என 2014 நவம்பரில் நாடா­ளு­மன்றத்­தில் அறி­வித்­தார்

டாக்டர் இங். அதைத் தொடர்ந்து பாரிஸ், இஸ்­தான்­புல், அண்மை­யில் ஜகார்த்தா உள்­ளிட்ட நக­ரங் களில் பயங்க­ர­வாதத் தாக்­கு­தல்­கள் நடந்­துள்­ளன. இந்தச் சம்ப­வங்களும் தீவிர­வாத எண்­ணங்களைக் கொண்ட­ தற்­காக அண்மை­யில் சிங்கப்­பூ­ரில் 27 பங்­ளா­தேஷ் ஊழி­யர்­கள் கைது செய்­யப்­பட்ட சம்ப­வ­மும் மிகவும் துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னவை என்றா­லும் அவை உண்மை நிலையை வலி­யு­றுத்­தும் உதா­ர­ணங்க­ளா­கத் திகழ்­கின்றன.