சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில் கட்டமைப்பின் மின்விநியோக அமைப்பு குறித்து மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட மின்துறை நிபுணர்கள் அடங்கிய தன்னிச்சையான ஆலோசனைக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. சாதனங்களை, கட்டமைப்பை அடிக்கடி பரிசோதித்தல், உதிரி பாகங்களை அடிக்கடி மாற்றுதல், புதிய கண்காணிப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் என்பன போன்ற பல நடவடிக் கைகளை நிபுணர்கள் குழு பரிந் துரைத்துள்ளதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்றுத் தெரிவித்தது. எடுத்துக்காட்டாக, ரயிலுக்கு மின்னாற்றலை வழங்கும் மூன்றா வது தடம், அது மாற்றப்படும் வரைக்கும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நிபுணர்கள் குழு கூறியுள்ளது.
எம்ஆர்டி மின்கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய பரிந்துரை
1 mins read
-

